"ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட புதிய ஆளுநர்கள்"
இலங்கையின் 09 மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதியினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் பெயர்களின் விபரங்கள் பின்வருமாறு,
01. ஹனீஸ் யூசுப் அவர்கள் மேல் மாகாண ஆளுநராகவும்,
02. சரத் பண்டார சமரசிங்க அபயகோன் அவர்கள் மத்திய மாகாண ஆளுநராகவும்,
03. பந்துல ஹரிஸ்சந்திர அவர்கள் தென் மாகாண ஆளுநராகவும்,
04. திஸ்ஸ குமாரசிரி வர்ணசூரிய அவர்கள் வடமேல் மாகாண ஆளுநராகவும்,
05. வசந்த குமார விமலசிறி அவர்கள் வட மத்திய மாகாண ஆளுநராகவும்,
06. நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் வட மாகாண ஆளுநராகவும்,
07. ஜயந்த லால் ரத்னசேகர அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநராகவும்,
08. சம்பா ஜானகி ராஜரத்ன அவர்கள் சபரகமுவ மாகாண ஆளுநராகவும்,
09. கபில ஜயசேகர அவர்கள் ஊவா மாகாண ஆளுநராகவும்,
நியமிக்கப்பட்டுள்ளதோடு இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவும் கலந்துக் கொண்டுள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி